Thursday, May 11, 2023

அரசியல்!!!

கட்சிகள் ஆயிரம் இருந்தும்,

நம் நாட்டில் குடிசைகள் வாழ்வதில்லை.

ஹைக்கூ...

எத்தனை மீன்கள் அழுதனவோ?

நீர் முழுவதும் உப்பு - கடல்!

❤அம்மா❤

அன்பு என்ற மூன்றெழுத்துடன், 

பாசம் என்ற மூன்றெழுத்தும், 

பரிவு என்ற மூன்றெழுத்தும் சேர்ந்தால் - 

அட! அம்மா என்ற மூன்றெழுத்து கிடைக்கிறதே!

🐵மனிதனின் மிருக புத்தி🐵

கம்பீரத்தை சிங்கதொட ஒப்பிடுகின்றனர்;

வீரத்தை காளையோடு ஒப்பிடுகின்றனர்;

நன்றியோடு இருந்தால் நாயோடு ஒப்பிடுகின்றனர்;

தந்திரகாரனாக இருந்தால் நரியோடு ஒப்பிடுகின்றனர்;

சாதுவாக இருந்தால் பசுவோடு ஒப்பிடுகின்றனர்;

இவ்வாறு மனிதனை மிருகங்களுடன் ஒப்பிட்டதால் தான்

மனிதனுக்கு மிருக புத்தி வந்ததோ!

பேதம்!

சும ங் கலி - விதவை சொற்களில் கூட என்ன ஒரு பேதம்.