சுமங்கலி - விதவை
சொற்களில் கூட என்ன ஒரு பேதம்.
கொட்டும் அருவியை விட அற்புதம்;
விழுந்த பின் ஒடும் நதி;
கேட்கும் இசையை விட அற்புதம்;
கேட்ட பின் சங்கீதத்தில் ஒளிரும் நாத மிச்சம்;
பெய்யும் மழையை விட அற்புதம்;
மரங்கள் பெய்யும் மீதித்துளிகள்;
பகிர்ந்த உடலை விட அற்புதம்;
பிரிந்த உடலின் மோக அமைதி!
விடியாத இரவு வேண்டும்;
கலையாத கனவு வேண்டும்;
பிரியாத உறவு வேண்டும்;
நிற்காத தூறல் வேண்டும்;
வாடாத மலர்கள் வேண்டும்;
வற்றாத நதிகள் வேண்டும்;
இதமான காலை வேண்டும்;
பதமான உணவு வேண்டும்;
குன்றாத கல்வி வேண்டும்;
மங்காத மதி வேண்டும்;
கலங்காத மனம் வேண்டும்;
மதமான பேய் பிடியாதிருத்தல் வேண்டும்;
நிம்மதியான நித்திரை வேண்டும்;
சீரான உடல் வேண்டும்;
சுத்தமான காற்று வேண்டும்;
விலகாத நட்பு வேண்டும்;
முதலியார் வீதியில்;
ரெட்டியார் தெருவில்;
நாடார் சந்தில்;
செட்டியார் மண்டபத்தில்;
சாதி ஒழிப்பு என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது.
அன்பு என்ற மூன்றெழுத்துடன்,
பாசம் என்ற மூன்றெழுத்தும்,
பரிவு என்ற மூன்றெழுத்தும் சேர்ந்தால் -
அட! அம்மா என்ற மூன்றெழுத்து கிடைக்கிறதே!
கம்பீரத்தை சிங்கதொட ஒப்பிடுகின்றனர்;
வீரத்தை காளையோடு ஒப்பிடுகின்றனர்;
நன்றியோடு இருந்தால் நாயோடு ஒப்பிடுகின்றனர்;
தந்திரகாரனாக இருந்தால் நரியோடு ஒப்பிடுகின்றனர்;
சாதுவாக இருந்தால் பசுவோடு ஒப்பிடுகின்றனர்;
இவ்வாறு மனிதனை மிருகங்களுடன் ஒப்பிட்டதால் தான்
மனிதனுக்கு மிருக புத்தி வந்ததோ!
சும ங் கலி - விதவை சொற்களில் கூட என்ன ஒரு பேதம்.