Thursday, May 11, 2023

பேதம்!

சுமங்கலி - விதவை

சொற்களில் கூட என்ன ஒரு பேதம்.

லஞ்சம்!

வாங்கினேன்- 

உள்ளே வைத்தார்கள்;

கொடுத்தேன்-

வெளியே விட்டார்கள்!

அற்புதம்!

கொட்டும் அருவியை விட அற்புதம்;

விழுந்த பின் ஒடும் நதி;


கேட்கும் இசையை விட அற்புதம்;

கேட்ட பின் சங்கீதத்தில் ஒளிரும் நாத மிச்சம்;


பெய்யும் மழையை விட அற்புதம்;

மரங்கள் பெய்யும் மீதித்துளிகள்;


பகிர்ந்த உடலை விட அற்புதம்;

பிரிந்த உடலின் மோக அமைதி!

வேண்டும்!

விடியாத இரவு வேண்டும்;

கலையாத கனவு வேண்டும்;

பிரியாத உறவு வேண்டும்;

நிற்காத தூறல் வேண்டும்;

வாடாத மலர்கள் வேண்டும்;

வற்றாத நதிகள் வேண்டும்;

இதமான காலை வேண்டும்;

பதமான உணவு வேண்டும்;

குன்றாத கல்வி வேண்டும்;

மங்காத மதி வேண்டும்;

கலங்காத மனம் வேண்டும்;

மதமான பேய் பிடியாதிருத்தல் வேண்டும்;

நிம்மதியான நித்திரை வேண்டும்;

சீரான உடல் வேண்டும்;

சுத்தமான காற்று வேண்டும்;

விலகாத நட்பு வேண்டும்;

பொன்னாடை!

கை தட்டல் இல்லை ஆரவாரம் இல்லை 

எனக்கு சால்வை போர்த்தப்பட்டது - முடிதிரித்துபவனால்!

பூகம்பம்!

பொறுமைக்கு உதாரமான 

பூமிதாயே பொறுமை  இழந்தாளோ?

சாதிகள் இல்லையடி...

முதலியார் வீதியில்;

ரெட்டியார் தெருவில்;

நாடார் சந்தில்;

செட்டியார் மண்டபத்தில்;

சாதி ஒழிப்பு என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது.

ஒற்றுமை!

மலரும் மங்கையும் ஒன்றுதான் 

இரண்டுக்கும் இதழ்கள் உண்டு இதயம் இல்லை.

அரசியல்!!!

கட்சிகள் ஆயிரம் இருந்தும்,

நம் நாட்டில் குடிசைகள் வாழ்வதில்லை.

ஹைக்கூ...

எத்தனை மீன்கள் அழுதனவோ?

நீர் முழுவதும் உப்பு - கடல்!

❤அம்மா❤

அன்பு என்ற மூன்றெழுத்துடன், 

பாசம் என்ற மூன்றெழுத்தும், 

பரிவு என்ற மூன்றெழுத்தும் சேர்ந்தால் - 

அட! அம்மா என்ற மூன்றெழுத்து கிடைக்கிறதே!

🐵மனிதனின் மிருக புத்தி🐵

கம்பீரத்தை சிங்கதொட ஒப்பிடுகின்றனர்;

வீரத்தை காளையோடு ஒப்பிடுகின்றனர்;

நன்றியோடு இருந்தால் நாயோடு ஒப்பிடுகின்றனர்;

தந்திரகாரனாக இருந்தால் நரியோடு ஒப்பிடுகின்றனர்;

சாதுவாக இருந்தால் பசுவோடு ஒப்பிடுகின்றனர்;

இவ்வாறு மனிதனை மிருகங்களுடன் ஒப்பிட்டதால் தான்

மனிதனுக்கு மிருக புத்தி வந்ததோ!

பேதம்!

சும ங் கலி - விதவை சொற்களில் கூட என்ன ஒரு பேதம்.