Thursday, May 11, 2023

அற்புதம்!

கொட்டும் அருவியை விட அற்புதம்;

விழுந்த பின் ஒடும் நதி;


கேட்கும் இசையை விட அற்புதம்;

கேட்ட பின் சங்கீதத்தில் ஒளிரும் நாத மிச்சம்;


பெய்யும் மழையை விட அற்புதம்;

மரங்கள் பெய்யும் மீதித்துளிகள்;


பகிர்ந்த உடலை விட அற்புதம்;

பிரிந்த உடலின் மோக அமைதி!

No comments:

Post a Comment

பேதம்!

சும ங் கலி - விதவை சொற்களில் கூட என்ன ஒரு பேதம்.